tamilnadu

img

75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத தின்னூர் மக்கள்

கிருஷ்ணகிரி, பிப். 15- ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் ரயில் நிலையம் அடுத்த பேருந்து நிறுத்தமே தின்னூர் ஆகும். இங்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஊர் சாலையின் இருபுறமும் புறம்போக்கில் மண்ணால் கட்டிய குடிசை, ஓட்டு வீடுகள் என 120 வீடுகள் உள்ளன. 600 பேர் வசிக்கின்றனர். அதேபோல் ஜீவா நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 75 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் வசிக்கின்றனர்.  துன்னூரில் 1979இல் எல் போர்ஜ் தொழிற்சாலையும், அரசு பட்டு வளர்ச்சித் துறை அலுவலகமும் துவங்கப்பட்டது. அது முதல் தின்னூர் எல்லோரும் அறிந்த பகுதியாக மாறியது. பட்டா கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அனைத்துத்துறை அரசு அலுவலகங்களிலும் மனு அளித்துள்ளனர். கடந்த 2018 பிப்ரவரி மற்றும் 2019 மார்ச்சில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த மக்களவை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்ககளிலும் வாக்குக் கேட்டு வரும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பட்டா கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டாம் தலைமுறையினர்கள் உட்பட 75 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், பட்டாதான் கிடைக்கவில்லை என 75 வயது ஆஞ்சப்பா, 70 வயது தோப்பம்மா, வெங்கட்டம்மா, 103 வயது முதிய கு’ற்றம்மா 74 வயது வாலியப்பா, இதே வயது ஒத்த முளியம்மா, சர்க்கப்பா, மணி, திம்மராயப்பா, ரயில்வே பணி ஓய்வு பெற்ற நாராயணப்பா உட்பட அனைவரும் கூறுகிறார்கள். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கும், லேஅவுட் மூலம் கட்டப்பட்ட வீடுகளுக்கும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இப்பகுதி ஏழை மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பிஜி.மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் நாகேஷ்பாபு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலாஆகியோர் கோரிக்கை விடுத்துள்னர். இல்லையென்றால் அனைத்து பகுதி மக்களையும் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.