கிருஷ்ணகிரி, ஜன.27- ஓசூர் ஜூஜூவாடி சக்தி வேல் நகரில் 71 ஆவது குடி யரசு தினம், குடியிருப்போர் நலச் சங்கம் துவக்கம், நீர் தேக்கத் தொட்டி கட்டிய 25 ஆண்டுகள் தினம் என முப் பெரும் விழா நடைபெற்றது. தலைவர் ரசாலம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜூ வரவேற்றார். உபத் தலைவர் குருசாமி முன் னிலை வகித்தார். கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ள சிசி டிவியை ஓசூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.ஏ.சத்யா திறந்து வைத்தார். அசோக் நகர் அலுவலகத்தை நகராட்சி வார்டு முன்னாள் உறுப்பி னர் திறந்து வைத்தார். அசோக் லேலண்டு துணைப் பொது மேலாளர் ரவிச் சந்திரன், சங்க பொதுச் செயலாளர் ராஜ சேகரன், நவீன கட்டிட பொறி யாளர் வாசுதேவன், பணி ஓய்வு பெற்றோர் நல சங்கச் செயலாளர் பன்னீர் செல்வம், அரசுப் பள்ளி ஆசி ரியை ரங்கநாயகி, அனைத்து குடியிருப்போர் நலசங்கத் தலைவர் துரை, பத்திரம் எழுதுவோர் சங்கத் தலைவர் ஆனந்தையாசிறு குறுந்தொழில்கள் (ஹோஸ் டிய) செயலாளர் வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்தாக அன்பே சிவம் புகழ் கிருஷ்ணகிரி கலைக் குழு சங்கர், பெருமாள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் வென்ற வர்களுக்கு பரிசளிக்கப் பட்டது. வாலிபர்கள் குழு வினர் ஒருங்கிணைத்தனர். பொருளாளர் கோபி நன்றி கூறினார்.