tamilnadu

img

தெலுங்கு மொழி மாணவர்களுக்கு ‘வெற்றி நம் கையில்’ கையேடு வெளியீடு

கிருஷ்ணகிரி, நவ. 9- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் 11,12 ஆம் வகுப்பு பயி லும் தமிழ், தெலுங்கு மாண வர்களின் தேர்ச்சி சத விகிதத்தை அதிகரிக்க எளி தாய் படிக்க ஒவ்வொரு ஆண்டும் ‘வெற்றி நம் கையில்’ வினா விடை தொகுப்பு கையேடு வெளி யிடப்படுகிறது. இத் தொகுப்பை சிறந்த ஆசிரி யர்களை கொண்டு தயா ரித்து அனைத்து அரசுப் பள்ளி களுக்கும் ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறு வனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சீஸ் வழங்கி  வருகிறார். இந்த ஆண்டும் தெலுங்கு மொழி  மாணவர்க ளுக்கு “வெற்றி நம் கையில்”  கேள்வி பதில் தொகுப்பு கையேடு தயாரித்து  வழங் கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கையேட்டை வெளியிட்டார். ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சீஸ் மாணவர் களுக்கு வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஓசூர் கல்வி  மாவட்ட அதிகாரி நாராய ணன் முன்னிலை வகித்தார். இந்த கையேட்டை சிறப்  பாக தயாரித்த ஆசிரியர் களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.