ஓசூர்,மார்ச் 10- ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கியது. கோலப்பட்டி, மண்ணாடிபட்டி, புங்கனை, புதூர் ஆகிய கிராமங்க ளில் நலப்பணிகள் நடை பெறுகிறது.இம் முகாமை கல்லூரி செயலாளர் ராஜீ தலைமை ஏற்று துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் திருமுருகன் வரவேற்றார். முகாம் நடைபெற இருக்கும் 7 நாட்களுக்கான பணிகளை திட்ட அலுவலர் பார்த்திபன் பட்டியலிட்டார். கல்லூரி முதல்வர் அருள், கோணப்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவ ணன், ஆசிரியர் ரவிசங்கர், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், புதூர் புங் கனை ஊராட்சி மன்றத் தலை வர் ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்தி தங்கவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் வசந்தா பழனி, ஊர் தலைவர் ராமஜெயம் உட்படபலர் கலந்து கொண்டனர்.திட்ட அலுவ லர் ராஜா நன்றி கூறினார்.