கிருஷ்ணகிரி, செப்.5- ஓசூர் பத்தளப் பள்ளி அருகில் உள்ள கசுவுகட்டா ஸ்டேன் போர்டு பப்ளிக் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட வடக்கு சரக அளவிலான கைப்பந்து (வாலிபால்), எறிப் பந்து (துரோபால்) போட்டிகள் நடைபெற்றது. விளை யாட்டுப் போட்டிகளின் துவக்க விழா இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் அறக் கட்டளை தலைவர் சுசிலா எம்ஜியார் தலைமை தாங்கி னார். மண்டல உடற் கல்வி ஆய்வாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். அத்தி முகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குருவப்பா, புக்கசாகரம் பள்ளியின் உடற்கல்வி ஆசி ரியர் இணைச் செயலாளர் மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டியில் 25 பள்ளி மாண வர்கள் கைப் பந்திலும் 18 பள்ளி மாணவர்கள் எறிப் பந்திலும் கலந்து கொண்ட னர். பள்ளியின் தாளாளர் லயன்.மு.எம்ஜியார் போட்டி களை துவக்கி வைத்ததுடன் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சிகளை தலைமை ஆசிரியர் முனை வர் மேரி ஜேக்கப், நிர்வாக இயக்குனர் பாஸ்கர் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.