கிருஷ்ணகிரி, ஜூன் 24- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 420 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு ஆசிரியராக பணி யாற்றும் வினோத்குமார் என்பவர் உடன் பணியாற்றும் ஆசிரியைகளுக்கும், மாணவி களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பள்ளி யின் தலைமை ஆசிரியர் சுகந்தியிடமும், மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளிட மும் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊக்கமடைந்த அந்த ஆசிரியர், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்து, மிரட்டியதால் ஊராட்சி மன்றத் தலைவர் அரவிந்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலை வர் அரவிந்த் தலைமையில் கிராமமக்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் சுகந்திடம் விசாரித்தனர். அப்போது, அங்கு வந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அங்க முத்து ஊராட்சி மன்றத் தலைவரையும், பொது மக்களையும் அவதுறாக பேசி பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இத னால் கோபமுற்ற பொதுமக்கள் பள்ளி முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை அறிந்து தேன்கனிக் கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நட வடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரிய ரும், காவல் துறையினரும் உறுதியளித்த னர்.