tamilnadu

img

முழுமையான கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 5- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  மாநகராட்சிக்குட்பட்பட்ட மிடுகரப்  பள்ளியில் பிரதான சாலையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கா மல் சாலையின் பாதியிலிருந்து கால்வாய்  அமைத்துள்ளனர். பிரீஸ்ஹோம் என்ற தனியார் லேஅவுட் உரிமையாளர் சாலை யின் மறுபுறம் கழிவு நீர் கால்வாயை  தெரு வரை கொண்டு வந்து ரேசன்  கடை முன்பு திறந்து விட்டுள்ள தால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்  தொற்றுநோய் பரவவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்தும், தெருவில் கழிவுநீர் கால்வாய் இணைப்பு அமைக்க வலியுறுத்தியும் பல முறை மாநகராட்சியில் புகார்  அளித்தும் இதுவரை  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.  கழிவு நீர்  செல்ல தொடர் கால்வாய் அமைக்க  வேண்டும், திறந்து விட்டுள்ள தனி யார் லேஅவுட் கழிவு நீர் கால்  வாயை ஊர் கடைசி வரை எடுத்துச்  செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சியை வலியுறுத்தி வாலிபர் சங்க மிடு கரப்பள்ளி கிளை சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்டச் செயலாளர் சுரேஷ், கிளைத் தலைவர் ஸ்ரீதர்,  வட்டச் செயலாளர் நாகேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.