தஞ்சாவூர் அக்.29- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலீல் மைதீன், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், “மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மற்ற சலுகைகளுக்காக மருத்துவச் சான்று வழங்க அரசு மருத்துவர்கள் கலந்து கொள்ள வேண்டும். மாதமாதம் குறிப்பிட்ட ஒரே தேதியில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்து முழுமையான கணக் கெடுப்பு நடத்த வேண்டும். தகுதி உடைய மாற்றுத் திறனாளி கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க வேண்டும்” எனக் கூட்டத்தில் வலியுறுத்திக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.