கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 220 குடும்பங்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் புனிதா, முனியம்மா, ரேகா, மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பி.ஜி.மூர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.