tamilnadu

செய்தித் துளிகள்

264 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,382 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிறன்று (ஆக.9) மட்டும் 7 பேர் உயிரிழந்தனர்.

கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த ஜூன் மாதம் அப்துல்கலாம் நகரில் வசிக்கும் அக்பர் பாஷா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பர்கத், நவாஸ் ஆகிய இருவரை கைது செய்து குண்டர் சட்டத்தில்  சேலம் சிறையில் அடைத்தனர்.

பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் பட்டா குருபரப்பள்ளியில் ரம்யா (15) என்ற சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தார்.

சர்வேயர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று  (ஆக. 9) உயிரிழந்தார்.

சீல் வைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் காலனி (மெர்குரி ஷு கம்பனி) தொழிற்சாலை அரசின் முழு பொதுமுடக்கத்தை மீறி ஞாயிற்றுக்கிழமை இயங்கியதால் வருவாய்த் துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

கோப்பு அனுப்பி வைப்பு

புதுவை மாநிலத்தில் மின்விநியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கைது

செஞ்சி அருகே சமணப்படுக்கை பாறையை வெடி வைத்து தகர்த்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.