ஓசூர் மத்திகிரி அரசுப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் மல்லேஷ், தலைவர் பூபதி தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பை ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.