tamilnadu

சாலை விபத்தில். ஒருவர் பலி

கிருஷ்ணகிரி, ஆக. 24- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் திங்களன்று (ஆக.24) அதிகாலை தாம்சன் பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனமும் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பும்  நேருக்கு நேர் மோதிய  விபத்தில் ஒருவர் பலியானார். நாற்றம்பாளையம் அருகே உள்ள அத்தி மரத்தூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் உள்ளிட்ட  4 பேர் இரண்டு இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வனத்துறைக்கு சொந்த மான ஜீப் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த  ஆனந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் அவருடன் வந்த மூன்று  பேரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  வனத்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;