கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு நடுநிலைப் பள்ளி வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது. மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்திற்குள்ளேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.