கிருஷ்ணகிரி, ஜூலை 13- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாமந்தி, ரோஜா, பட்டன் ரோஸ், மல்லிகை, முல்லை, கனகாம்பரம் மற்றும் ஏற்று மதிக்கான விலை உயர்ந்த ஜெர்பரா, ஆஸ்டில் ஆகிய மலர்களை பயிரிடு கின்றனர். விவசாயிகளின் தினசரி விற்பனைக்கான சந்தை ஓசூர் பேருந்து நிலையம் எதிரில் தனி யாருக்கு சொந்தமான இடத்திலும், தேசிய நெடுஞ் சாலை உள்ள மேம்பாலத்திற்கு அடியிலும் செயல்பட்டு வந்தது. தினசரி மதி யம் 12 மணி வரை விற்க, வாங்க என சரா சரியாக 1000 பேர் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சந்தைக்கு வருபவர்களும், வியா பாரிகளும் முகக் கவசம் அணியவில்லை, தனிமனித இடைவெளியையையும் கடை பிடிக்கவில்லை. இதனால் தனியார் இடத்தில் செயல்பட்ட மலர் சந்தைகள் மூடப்பட்டன.
ஓசூர் அந்திவாடியில் உள்ள அரசு ஸ்டேடியம் அருகில் தனிமனித இடைவெளி யுடன் சந்தை செயல்பட மாநகராட்சி அனு மதித்தது. ஆனால் அங்கு போதுமான வசதி களை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வில்லை. தற்போது ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்காலிக மலர் சந்தை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மேலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தல், மறுபுறம் தினசரி பூக்களை விற்றால் தான் வாழ்வாதாரத்திற்கு வழி என்ற நிலையில் விவ சாயிகளும், வியாபாரிகளும் உள்ளனர். இது குறித்து சிஐடியு நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக மலர் சந்தைக்கு மேற்கூரை அமைத்துத் தர வேண்டும், மழை நீர் தேங்காமல் வடிகால் அமைக்க வேண்டும், நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றார்.