மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
பொள்ளாச்சி, மே 8- கொரோனோ பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் உடனடியாக வழங்கிடக்கோரி, அனைத்துவகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கத்தி னர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கொரோனோ வைரஸ் தொற்று ஊரடங்கினால் வாழ் வாதாரம் இழந்து வாடும், மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும் என பொள்ளாச்சி சீ.மலையாண்டிப் பட்டனம் ஊராட்சி அலுவலகத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கத்தின் பொள்ளாச்சி பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் மற்றும் வெள்ளியங்கிரி, வழக்கறிஞர் இமயவரம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு
ஈரோட்டு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சத்தியமங்கலம் தாலுகா செயலாளர் எஸ்.ஏ.ராமதாஸ் தலைமை தாங்கினார். சத்திய மங்கலம் தாலுகா தலைவர் குருசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் டீ.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நிவாரண நிதி ரூ.5000 வெகுவிரைவில் வழங்குவதாக அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதேபோல், பவானி வட்டம் காடையம்பட்டி, பவானி சொக்கர் அம்மன் நகர், புன்னம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.