tamilnadu

img

ஓசூர் தொகுதியில் திமுக சாதனை வெற்றி!

கிருஷ்ணகிரி, மே 26-ஓசூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எஸ்.ஏ.சத்யாமுதன் முறையாக திமுகசார்பில் தமிழக சட்டமன்றத்திற்குள் செல்கிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாலாகிருஷ்ண ரெட்டி, அதிமுக அமைச்சராக இருந்தார். மக்கள் போராட்டத்தின்போது பேருந்து மீது கல் எறிந்த வழக்கில் குற்றவாளியாக தனி நீதிமன்றம் அறிவித்தது. இதனன் காரணமாக அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர்பதவியையும் பாலகிருஷ்ணா ரெட்டி இழந்தார். இதனையடுத்து, மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளராக பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி நிறுத்தப்பட்டார். திமுக தலைமையி லான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் எஸ்.ஏ.சத்யா போட்டியிட்டார்.  வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி சுற்றில் வெற்றி அறிவிக்காமல் காலம் தாழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் திமுக வேட்பாளர் சத்யா 1,15,027 வாக்குகள் பெற்று 23,213 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து எஸ்.ஏ.சத்யா சென்னை அறிவாலயத் திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். பின்னர்சத்யாவுக்கு திமுக கூட்டணித்தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும் வேப்பணப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முருகன், நிர்வாகிகள் சுகுமார், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் தலைவர் முரளிதரன், நீலகண்டன், முத்தப்பா, முருகன், சூர்யா கணேஷ், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, மாவட்டக்குழுஉறுப்பினர்கள் சேதுமாதவன், நாராயணமூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் எம்எம் ராஜூ, சீனிவாசன் நாராயணசாமி, ராஜேந்தின், கோவிந்தன், சீனிவாசலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டணிக் கட்சித்தலைவர்கள் தொண்டர்களுடன் கொட்டும் மழையிலும்  ராயக்கோட்டை  சாலையிலிருந்து ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் சாலையிலுள்ள அண்ணா சிலைக்கும், கருணாநிதி படத்திற்கும் மாலை அணிவித்தார். ஓசூர் வரலாற்றில் திமுக முதன் முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.