வீட்டுவரி உயர்வை கைவிடக் கோரி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓசூர் ராம் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உமாராணி, செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் சீனிவாசலு, கிருஷ்ணதாஸ், சத்யமூர்த்தி, பாஸ்கர், ஹோஸ்டியா தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.