தரங்கம்பாடி, நவ.22- நாகை மாவட்டம், திருக்கடையூர் ஊரா ட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் மிக மோச மாக பழுதடைந்து காணப்படும் சாலை களை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்கடையூர் கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலா ளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், இராசையன், ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரி யேல், மார்க்ஸ், வில்லியம், குணசேகர் உள்ளிட்டோர் உரையாற்றினர். அபிஷேகக்கட்டளை, பிச்சக்கட்டளை, வெள்ளைகுளம் கிராமங்களின் உட்புறச் சாலைகள், ஆணைக்குளத்தெரு மற்றும் சன்னதி வீதிச்சாலை,மேலத்தெரு, கீழவீதி ஆகிய சாலைகள் மிக மோசமாக சேத மடைந்து நடந்துக் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் உடனடியாக சீரமைக்கவில்லையெனில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.