கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில், மடம், வக்ஃபோர்டு தேவாலயங்கள் உள்ளிட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்ககள் சாகுபடி செய்பவர்கள், அடிமனை வாடகை செலுத்தி குடியிருப்பவர்கள், அதில் சிறு வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்தும் அந்த நிலங்களை கிரயம் செய்து தர தமிழக அரசை வலியுறுத்தியும் கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சபாபதி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், துணைச் செயலாளர் இருதயராஜ், வட்டச் செயலாளர் முத்துக்குமார், தண்டபாணி ஆகியோர் பேசினர்.