tamilnadu

img

நினைவேந்தல் நிகழ்ச்சி

ஓசூர், ஜூன் 11- நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பலி யான மாணவிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் ஓசூர்  ராம் நகரில் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ  சங்க தலைவரும், கூட்டமைப்பின் தலைவரு மான வாசுதேவன் தலைமை தாங்கினார். செய லாளர் வனவேந்தன், பொருளாளர் எல்லோரா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன், திமுக எம்எல்ஏ  சத்யா, சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன்,  சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சேது மாதவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் மாதையன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சந்துரு, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் தலைவர் ஆடிட்டர் பாலசுந்தரம், அனைத்து குடியிருப்போர் நல சங்க துணைத் தலைவர் சீனிவாசுலு மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

;