tamilnadu

img

அவிநாசி: குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்

அவிநாசி, டிச. 9- அவிநாசி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் இன்றி தத்தளிக்கும் நிலைக்கு கிராம மக் கள் தள்ளப்பட்டுள்ளனர். அவிநாசி ஒன்றியம், அவிநாசி பேரூராட்சி, கருவலூர், நம்பியா பாளையம், வெள்ளியம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கிராம மக்களுக்கு முதலாவது குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வடிகால் வாரியம் முன்னறிவிப்பின்றி குடிநீரை நிறுத்தம் செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையோரமுள்ள இரண்டாவது திட்ட குடிநீர் ஏர் வாழ்விலிருந்து கசிகின்ற தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தொடர்ந்து இரண்டு மாதங்களாக முதலா வது குடிநீர் திட்டத்தில் முறை யான குடிநீர் வினியோகம் செய் யப்பட முடியவில்லை. மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங் குவது அல்லது  ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்து தண்ணீர்  எடுத்து வரும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அன்றாடம் வேலைக்கு செல்ல முடியாமல் வாழ் வாதாரம் பாதிக்கின்றது. மாவட்ட நிர்வாகம்  உடனடியாக தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண் டும் என கூறினர்.  இதுதொடர்பாக குடிநீர் வடி கால் வாரிய அதிகாரியிடம்  கேட்ட போது, நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் போது பல இடங் களில் குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். இதனால் முறை யாக குடிதண்ணீர் வழங்க முடிய வில்லை. இவை விரைவில் சரிசெய் யப்படும் என தெரிவித்தார்.