கிருஷ்ணகிரி, ஜூன் 9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்.நாகராஜ னுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேன்கனிக்கோட்டை யில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சந்தி ரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன் வர வேற்றார். வாழ்த்துரை மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் அன்பரசு, மாநி லச் செயலாளர் சௌந்தரரா ஜன், ஆகியோர் பேசினர். 1981 ஆம் ஆண்டு தேன் கனிக்கோட்டை பட்டு வளர்ச்சித் துறையில் பணி யில் சேர்ந்த நாகராஜன், அரசு ஊழியர் சங்க கிளை, பட்டு வளர்ச்சித் துறை சங் கம் கிளைகளை துவக்கி னார். கடந்த 38 வருடம் ஒரே இடத்தில் பணிபுரிந்து தமி ழகத்தில் சாதனை புரிந்த நாக ராஜன் சங்கத் தலை வர்கள் எம்.ஆர்.அப்பன், ஸ்ரீதர், கங்கா தரன் உள்ளிட் டோருடன் இணைந்து சங்கப் பணியாற்றியவர். ஒருங்கிணைந்த தரும புரி மாவட்டத்திலும், பின்னர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது கிருஷ்ணகிரி மாவட் டத்திலும் தொடர்ந்து சங்கப் பொறுப்பில் பட்டு வளர்ச்சித் துறை சங்கத்தை உருவாக்கி நிலை நிறுத்தி சாதனை படைத்தவர். சங் கத்தின் அனைத்து போராட் டங்களிலும் கலந்துகொண்ட தோடு மறியல்களிலும் கைதாகியுள்ளார். நிர்வாகம், மற்றும் அர சின் அடக்குமுறைக்கு எதி ரான போராட்டத்தில் 1992 ஆம் ஆண்டில் தலைமறை வாக இருந்துள்ளார். சங்கத்திற்காக கடுமையாக உழைத்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தியும், சிறுபான்மை யினர் மீதான மதவெறி தாக்குதலை கண்டித்தும் தேன்கனிக்கோட்டையில் மாபெரும் ஊர்வலம் நடதி யவர் என்றும் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். துறைவாரி சங்க நிர்வாகி கள் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெய ராமன், செயற்குழு உறுப்பி னர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வட்டச் செயலாளர் வெங்கடேஷ், தேவராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். இந்த பாராட்டு விழா வில் தீக்கதிர் வளர்ச்சி நிதி யாக ரூ. 10 ஆயிரத்தை எஸ்.ஆர் ஜெயராமனிடம் நாகராஜன் வழங்கினார்.