tamilnadu

img

டி20 லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்

வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகளில் விளையாட, இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கியவர் யுவராஜ் சிங். இவர் கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரிலும், விளையாட போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்து, இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டு, கடிதம் என்றை அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் இதை உறுதி செய்த பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில், ‘‘ஒன்றிரண்டு வெளிநாட்டு டி20 லீக் அணிகள், யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியுள்ளன. இதனால் யுவராஜ் சிங் வெளிநாட்டு வீரராக கலந்து கொள்வதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.