tamilnadu

img

உலக கோப்பை 2019 : முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டமானது,  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே,  சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சஹல் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், குல்திப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இதில், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, சதம் அடித்தார். வெற்றியை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதியில் 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து. தென் ஆப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதில் இந்திய அணியில் ரோகித் சர்மா 122 (128 பந்துகளில் (2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகள்) ரன்களுடனும், பாண்டியா 15 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ரபாடா 2 விக்கெட்களும், கிறிஸ் மோரிஸ் மற்றும் பெலக்வாயோ தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். மேலும், ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.