மகளிர் டி-20 உலகக் கோப்பை
மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை தொட ரின் 7-வது சீசன் ஆஸ்திரேலியாவில் வெள்ளியன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற் றுள்ள இந்த தொடரில் இளம் வீராங் கனைகள் அதிகம் பங்கேற்றுள்ளதால் தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்து வரும் நிலையில் மைதான தேர்வு தொடர்பான விஷயத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அது யாதெனில் மகளிர் உலகக் கோப்பை தொடருக்காக பெர்த்(1), சிட்னி(2), மெல்போர்ன் (2), கான்பெரா (1) ஆகிய 4 நகரங்களில் உள்ள 6 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சர்ச்சை என்னவென்றால் மேற்கூறப்பட்ட 4 நக ரங்களில் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்கள் கிழக்கு எல்லைப் பகுதியில் ஒரே வட்டத்தில் உள்ளன. அதாவது அருகருகே உள் ளன. பெர்த் மட்டும் மேற்கு எல்லை யில் உள்ளது. இந்த மூன்று நகரத்தில் இருந்து பெர்த் நகரத்திற்குச் செல்ல ஏறக்குறைய 3000 கிமீ தாண்டி பய ணிக்க வேண்டும். இது வீராங்கனை களுக்குத் தேவையில்லாத பயண அலைச்சலை உருவாக்கும். இதில் மிகப்பெரிய சர்ச்சை என்ன வென்றால் அதிரடிக்கு பெயர் பெற்ற டி-20 உலகக்கோப்பை பெர்த் நக ரத்தில் உள்ள வாகா மைதானம் தேர்வு செய்யப்பட்டது தான். உலகின் அதி வேக மைதானம் என அழைக்கப்படும் பெர்த் மைதானம் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே உதவும். ஒருநாள், டி-20 போட்டியை நடத்துவதற்கான சாதக மான சூழலை உருவாக்காது.
இதற்குக் காரணம் இந்த மைதா னத்தின் களிமண் அப்படி. கடினமாக இருக்கும். குளிர், வெப்பம் என இரண்டு காலங்களிலும் மிகவும் உயி ரோட்டமாக இருக்கும். சாதாரண வேகத்தில் வீசப்படும் பந்துகள் கூட தாறுமாறாக எகிறி தலையைத் தான் பதம் பார்க்கும். ஸ்விங் வகை கூட நெஞ்சிற்கு எகிறும் என்றால் பவுன்சர் வகை பந்துகளெல்லாம் கேட்கவா வேண்டும். தழும்புகளை உருவாக்கா மல் விட்டுவைக்காது. பெரும்பாலும் பெர்த் மைதானத்தில் நடத்தப்படும் போட்டிகளில் ஆடவர் அணிகளைச் சேர்ந்தவர்கள் காயம் இல்லாமல் சென்ற வரலாறு கிடையாது. இது அனை வர்க்கும் தெரிந்த விஷயம் தான். இத்தகைய முரட்டுத்தனமான சிறப்பை பெற்றுள்ள பெர்த் மைதா னத்தை மகளிர் உலகக்கோப்பை தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று புரியவில்லை. மகளிர் கிரிக்கெட்டில் பவுன்சர் வீசமாட்டார் கள் என்றாலும் சாதாரண வேகத்தில் வீசப்படும் பந்துகள் பலவீனமான உடல்வாகைப் பெற்றுள்ள பெண்க ளுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது. இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் நிறைய வீராங்கனைகள் தாய்க்குலம் தான். இதனை பற்றி சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஏன் யோசிக்கவில்லை. எந்தவகையான திட்டத்துடன் ஐசிசி இந்த உலகக்கோப்பை தொட ரைத் தயார் செய்தது எனப் புரிய வில்லை. ஏற்கெனவே இங்கிலாந்து நகரில் மழைக்கான அறிகுறி இருப் பது தெரிந்தும் அங்கு ஆடவர் உலகக் கோப்பை தொடரை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரும் சர்ச்சை பாதையில் பயணித்து வருகிறது என் பது குறிப்பிடத்தக்கது.