tamilnadu

img

ஆஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

சாம்பல் போர் என அழைக்கப்படும் பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் வியாழனன்று தொடங்குகிறது.  தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், கடைசி டெஸ்ட்  போட்டியையும் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பை யுடன் தாய்நாடு கொண்டு செல்லும் திட்ட த்தில் ஆஸ்திரேலிய அணியும் என  இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவ தால் ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பு வளையத்தில் ஆஸி., ரசிகர்கள்

கிரிக்கெட் விளையாட்டில் இனவெறி சர்ச்சைகளை அதிகம் உருவாக்கும் பெருமைக்குரிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் நடப்பு சீசன் ஆஷஸ் தொடரிலும்  தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இங்கிலாந்து அணியின் இளம்வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதல் தொடர்பான செய்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யும் பொருளாகப் பிரபலமடைந்துள்ளது. சாதாரண கேளிக்கை நிகழ்வு அரசியல் பிரச்சனையாக மாறும் அளவிற்கு நடந்துகொண்ட ஆஸ்திரேலிய ரசிகர்கள் மீது இங்கிலாந்து அரசுக்கு கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இனவெறி தொடர்பான நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்க ஓவல் மைதான அதிகாரிகளுக்கு இங்கிலாந்து அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மீண்டும் இனவெறி கோஷங்கள் எழாதவாறு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மீது தனிக் கவனம் செலுத்தச் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.