tamilnadu

img

வயதைக் குறைத்துக் கூறிய விவகாரம்

1996-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் காலடி வைத்த பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி அதே ஆண்டில் 37 பந்துகளில்சதமடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி னார். அந்த காலகட்டத்தில் என் வயது16 வயதுதான் என்று கூறி கிரிக்கெட் உலகினை அதிர்ச்சி அடைய செய்தார். அப்ரிடியின் வயது குறித்து பல ஆண்டுகளாக சந்தேக சாரால் வீசினாலும் அதற்கான விடை கிடைக்கவில்லை இந்நிலையில் அப்ரிடி எழுதியுள்ள கேம்சேஞ்சர் என்கிற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த நூலில் நான் 1975-ல் பிறந்தேன். 1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தேர்வாகினேன். நிர்வாகிகள் சொன்னது போல எனக்கு 16 வயது அல்ல, 19 தான். என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.இந்தச் சர்ச்சை விவகாரம் குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்ஹத் கடுமையாக விமர்சித்தனர்.ஒருவார இடைவெளிக்கு பின்பு சாஹித் அப்ரிடி தனது வயது குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதுகூறியதாவது, “நான் கிராமத்தில் பிறந்தவன். அங்கு பிறந்த தேதியைக் குறிப்பிடும் வசதி இல்லை. பிறப்புச் சான்றிதழும் வழங்கப் படாது. 14 வயதுக்குப்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது என் வயதே எனக்குத் தெரியாமல் இருந்தது. தேர்வுக்குழுவினர் என் வயதைக் கேட்டபோது, மற்றவர்கள் என்னை என்னச் சொல்லச் சொன்னார்களோ அதையே கூறினேன். அந்த வயது, கிரிக்கெட் வாரியப் பதிவுகளில் அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.எங்கள் குடும்பம் கராச்சிக்குக் குடியேறியபோது நான் பிறந்த மாதமும் தேதியும் மட்டுமே தெரியும்.அதனால் தான் குழப்பம் ஏற்பட்டது.நான் பிறந்த வருடம் 1977. ஆனால் புத்தகத்தில் உள்ளது போல 1975 அல்ல. அது பதிப்பாளர், காப்பி எடிட்டர்கள் செய்த தவறு. 2-வது பதிப்பில் தவறு சரிசெய்யப்படும். சில தகவல் பிழைகளும் அடுத்தப் பதிப்பில் சரிசெய்யப்படும்.1996 முதல் அதிவேக சதமடித்த வீரர் என்கிற சாதனை என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.