இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந் தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் ஆன்டிகுவா மைதானத் தில் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி மூலம் இந்தியா, விண்டீஸ் அணிகள் உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரில் காலடி வைத்தது. முத லில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந் தது. விண்டீஸ் அணி தனது முதல் இன் னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டா வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரஹானே (102), விஹாரி (93) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப் பிற்கு 343 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடி னமான இலக்குடன் களமிறங்கிய விண்டீஸ் அணி இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (5 விக்., - 7 ரன்கள் மட்டுமே கொடுத்து), இஷாந்த் சர்மா (3 விக்.,) ஆகியோரின் வேகத்தை வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய விண்டீஸ் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரை வெற்றியோடு துவங்கி யுள்ளது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 183 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ரஹானே ஆட்ட நாய கன் விருதை வென்றார். 2-வது டெஸ்ட் மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.