இந்திய கிரிக்கெட் அணி சுமார் 27 வருட ங்களாக நீல ஜெர்சியில் தான் விளையாடி வரு கிறது. ஆனால் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வழக்கத் திற்கு மாறாக வெளிர் நீல நிறத்தால் ஆன ஜெர்சியுடன் களமிறங்கியது. இங்கிலாந்தின் ஜெர்சி இந்திய அணியின் ஜெர்சியைப் போன்று ஒரே வண்ணத் திலிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்திற்கு விலக்கு இருப்பதால் அந்த அணிக் கெதிரான ஆட்டத்தில் மட்டும் ஜெர்சியை மாற்று மாறு இந்திய அணிக்குச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உத்தரவிட்டுப் பல வண்ணங்களில் ஆன மாதிரி ஜெர்சியை அளித்தது. ஐசிசி பல வண்ணங்கள் அளித்தாலும் இந்திய அணி நிர்வாகம் காவி, கருநீலம் கலந்த ஜெர்சியை தேர்வு செய்தது. கேளிக்கை அம்ச மான கிரிக்கெட் விளை யாட்டிலும் காவியா? எனக் கொந்தளித்த எதிர்க்கட்சி கள், கிரிக்கெட் நிபுணர்கள், ஆன்லைன் ஆர்மிகள் அனை வரும் ஆளும் பாஜக அரசை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்தனர். ஞாயிறன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதி ரான ஆட்டத்தில் காவி, கருநீலம் கலந்த வண்ணக்கலவை ஜெர்சியில் களமிறங்கிய இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு இங்கிலாந்து அணி யிடம் உதை வாங்கியது. தோல்வியை ருசிக்காமல் வீறு நடைபோட்ட இந்திய அணி இங்கிலாந்து அணி யிடம் வீழ்ந்ததற்கு ஜெர்சி தான் காரணம் என ரசிகர்கள் மீண்டும் மோடி அரசை சமூக வலைத்தளத்தில் கசக்கிப் பிழிந்தெறிந்து வரு கின்றனர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி,” இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்து அணியிடம் தோல்வி கண்டதற்குக் ஜெர்சி தான் காரணம்” எனக் கூறி யுள்ளார். பா.ரஞ்சித் இயக்கிய “காலா” படத்தில் ரஜினி காந்த்தின் இரண்டாவது ஜோடியாக நடித்த ஹீமா குரேஷி நீல ஜெர்சி தான் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் கூறுவது மூடநம்பிக்கை அல்ல. நீல ஜெர்சி தான் வேண்டும். அவ்வளவுதான்” எனக் கறாராகக் கூறி யுள்ளார். மேலும் நெட்டிசன் கள் நீலநிற ஜெர்சி தான் வேண்டும் என்ற ஹேஸ்டேக் கையும், மீம்ஸ் மூலம் இந்திய அணியின் காவி வண்ண ஜெர்சியை கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.