tamilnadu

img

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி - ராகுல்,ரிஷப் பந்த் நீக்கம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடக் கூடிய  இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, புஜாரா, விஹாரி, மயங்க் அகர்வால், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விரதமான் சகா, இசாந்த் சர்மா, முஹமது ஷமி அகிய 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. மேலும் கடந்த டெஸ்டில் சொதப்பிய கே.எல்.ராகுல், முரளி விஜய் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

;