tamilnadu

img

சியேட் விருதுகள் அறிவிப்பு

பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சியேட் கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகளை ஆண்டுதோறும் கவுரவிப்பது வழக்கம்.நடப்பாண்டுக்கான சியேட் விருதுகள் திங்களன்று (இரவு) அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேத்தேஷ்வர் புஜாராவுக்கு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும், ரோஹித் சர்மாவுக்குச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது.சிறந்த டி-20 வீரருக்கான விருது ஆரோன் பிஞ்ச்-க்கு (ஆஸ்திரேலியா) வழங்கப்பட்டது.சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். ஸ்மிருதி மந்தனா சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக குல்தீப் யாதவ் மற்றும் சிறந்த டி-20 பந்துவீச்சாளராக ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உலகக் கோப்பை (1983) வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.விராட் கோலி சிறந்த வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகிய இரு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.