tamilnadu

img

காட்டுத் தீ நிவாரண கிரிக்கெட் போட்டி பயிற்சியாளராகக் களமிறங்கும் சச்சின்

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில்  ஆரம்பித்த காட்டுத்தீ தற்போது அதனை ஒட்டியுள்ள எல்லைப்பகுதி நகரங்களுக்கும் பரவி கடும் காற்று மாசுவை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய நிர்வாக நகரங்களான சிட்னி, மெல்போர்ன் போன்ற பகுதிகள் புகையில் மிதக்கின்றன.    இந்நிலையில் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காகக் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்று பிப்ரவரி 8 அன்று நடைபெறவுள்ளது. பிரபல வீரர்கள் பலர் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி புஷ் ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் நடைபெறுகிறது.  பாண்டிங், வார்னர், லாங்கர், கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க் போன்ற முன்னணி வீரர்கள் பங்குபெறுவதாகவும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்குபெறும் ரிக்கி பாண்டிங் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். 

;