இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தொட ரில் பங்கேற்ற பொழுது, தாஜ் ஹோட்ட லில் பணியாற்றிய ஊழியர் சச்சினுக்கு முழங்கை பராமரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனை பின்பற்றியுள்ள சச்சின் நல்ல பலனடைந்துள்ளதாகக் கூறி, கடந்த வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது முழங்கை பரா மரிப்புக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஹோட்டல் ஊழியரை யாரா வது கண்டுபிடித்துத் தர முடியுமா” என ஆங்கிலத்தில் பேட்டியும், தமிழில் தட்டச்சு பதிவும் போஸ்ட் செய்திருந்தார். இந்நிலையில் சச்சின் தேடிய அந்த தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சென்னை தாஜ் ஹோட்டலில் தற்போது பாதுகாப்பு காவலராக பணியாற்றிவரும் குரு பிரசாத் எனத் தெரியவந்துள்ளது. சச்சின் தேடுதல் குறித்து குருபிர சாத் கூறியதாவது,” நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருப்பவர்களும், எனது நண்பர்களும் மிகவும் உற்சாக மாக இருக்கிறார்கள். சச்சினை சந் திக்க விரும்புகிறார்கள். என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுமாறு சச்சினிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று குரு பிரசாத் கூறியுள்ளார்.