இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. வெற்றிகொண்டாட்டம் முடிந்தவுடன் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு பெண்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை கசியவிட வெடித்தது சர்ச்சை.புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள் இது தான் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சியா? என கிண்டலுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரவி சாஸ்திரியின் புகைப்படத்தைப் பார்த்த பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகை யாளர்,” இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சி சிறப்பாகப் போகிறது” என நக்கலடித்துள்ளார். இது சாதாரண புகைப்படம் என்றாலும் பெவிலியனுக்கு வெளியே பயிற்சி யாளர் ஒருவர் இதுபோன்ற செயலில் இறங்குவது முதல் முறை தான். மைதான ரசிகர் களுடன் புகைப்படம் எடுப்பது வேறு. வெளியே புகைப்படம் எடுத்துக் கொள்வது வேறு. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.