tamilnadu

img

இந்தியாவிடம் கெஞ்ச முடியாது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

புல்வாமா தாக்குதல் பிரச்ச னையின் போது இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது என மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஜோடித்த நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் சமூக வலைத்தளத்தில்  பிரச்சாரத்தைப் பரவ விட்டனர். இதன் விளைவாக மோடி அரசின் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலை வர்கள் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது என அறிக்கைவிட்டனர். இந்த விவகா ரத்தில் சச்சினும் அவர்களுக்கு ஆதர வாக இருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மோடி  அர சின் முடிவிற்கு ஆதரவாக இருப்போம் என கூறி சர்ச்சையை கிளப்பியது.  அதன்பின் மக்களவைத் தேர்தல் பிசியால் இந்த விவகாரம் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து மட்டும் தான் தெரிவித்தார் தவிர பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டம் பற்றி வாய் திறக்கவில்லை.   இந்நிலையில், 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கும் இந்த ஆட்டம் ஞாயிறன்று மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது  இந்த ஆட்டம் தொடர்பாகத் தடை  உத்தரவு எதுவும் பிசிசிஐக்கு வர வில்லை என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது உறுதியாகிவிட்ட நிலையில், தண்ணீர் ஊற்றி அணைந்த புல்வாமா  தாக்குதல் பிரச்சனையைப் பாகிஸ்தான்  கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மனி மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி மீண்டும் பற்ற வைத்துள்ளார்.  இந்த விவகாரம் குறித்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது, “எங்களுடன் (பாகிஸ்தான்) கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான  முறையில், இருநாடுகளுக்கு (இந்தியா - பாக்.,)  இடையேயான கிரிக் கெட் உறவுகள் மீண்டும் மலர வேண்டும் என்று நாங்கள் நினைக் கிறோம்” என்றார்.