tamilnadu

img

உலகக்கோப்பை 2019 போட்டி 2 : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தான் 106 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி இலக்காக 106 ரன்களை நிர்ணயித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நேற்று துவங்கியுள்ளன. நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 21.4 ஓவர் 105 ரன்களை மட்டுமே சேர்த்து முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.