இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்களை சேர்த்தது. இதில் நியூசிலாந்தின் கப்தில் 79 ரன்களும், டெய்லர் 73 ரன்களும் அணிக்கு சேர்த்தனர். இந்திய அணியின் சாகல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
.
இதை அடுத்து, 274 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே ரன்களை குவிக்க திணறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 49ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை மட்டுமே இந்திய அணி அடித்து தோல்வியை தழுவியது. ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களிலும், நவ்தீப் சைனி 45 ரன்களும் இந்திய அணிக்கு சேர்த்தனர். மூன்று ஒருநால் போட்டிகளை கொண்ட இந்த போட்டியில், 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.