இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. விசாகப்பட்டிணத்தில் நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கீழ் இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் முழுமையாக குணமடையாததால், அவர் கட்டாக்கில் நடைபெற உள்ள 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக நவ்தீக் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.