tamilnadu

img

இந்திய அணி சிறப்பான துவக்கம்

விசாக் டெஸ்ட் 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளை இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங் கியது. தொடக்க வீரர்களாக ரோஹித்  சர்மா, இளம் வீரர் மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.  முதலில் திணறிய ரோஹித் - மயாங்க் ஜோடி உணவு இடைவேளைக்குப் பின்பு விசாகப்பட்டின மைதானத்தில் நங்கூரம் அமைத்து ரன் குவிக்கத் துவங்கியது. இந்திய அணியின் தொடக்க ஜோடியை கழற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் பல்வேறு வகையில் வியூகம் அமைத்தும் பலனில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் - மயாங்க் ஜோடி அரைச் சதமடித்து அசத்தி யது. அரைச் சத மடித்தவுடன் அதிரடியைக் கையிலெடுத்த ரோஹித் சர்மா அடுத்த சில நிமிடங்களில் சதமடித்து அசத்தினார். தொடக்க வீரராக ரோஹித் சர்மா விளாசும் முதல் சதம் இது.

மழை அச்சுறுத்தல் காரணமாகத் தேநீர்  இடைவேளை முன்னதாகவே அறிவிக்கப் பட்டது. அடுத்த சில நிமிடங்களில் மழையும் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டது. இடைவேளை தராமல் மழை மட்டும் தனியாக விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 115, மயாங்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.