tamilnadu

img

பாதுகாப்பு வளையத்தில் இந்திய அணி

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20தொடரின் முதல் ஆட்டம் தில்லி மைதானத்தில் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளராகக் களமிறங்கும் அரசியல் பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் அனைத்து இந்திய லஸ்கர் எனும் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது.  இதனால் தில்லி மாநகரம் காவல்துறை கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்குத் தனிநபர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்திய வீரர்களின் வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகத் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளனர். போட்டி நடக்கும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;