tamilnadu

img

மூன்றாவது டி20 போட்டி : நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

நியூசிலாந்தில் இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்து, நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் ரோஹித் சர்மா 40 பந்துகளுக்கு 65 ரன்களும், கேப்டன் விராட் கோலி 27 பந்துகளுக்கு 38 ரன்களும், கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 27 ரன்களும் அணிக்கு சேர்த்துள்ளனர். 

;