tamilnadu

img

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சூதாட்டம் - பிசிசிஐ விசாரணை

கடந்த மாதம் நடந்த முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டங்களில் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் கூறியதாவது,கடந்த மாதம் முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் வந்துள்ளது.மேலும் வாட்ஸ்அப் மூலம் தரகர்கள் தங்களை அணுகியதாக  வீரர்களும் பிசிசிஐ-யிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.குஜராத் மற்றும் கொல்கத்தா சார்ந்த புக்கிங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஒரு டி.என்.பி.எல் குழு உரிமையாளருடனும் தொடர்பு கொண்டிருந்ததாக தகவல் வந்துள்ளது.ஆகையால் இதுகுறித்து அனைத்து தரப்பிலும் பிசிசிஐ விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
 

;