tamilnadu

img

கோலி கருத்துக்குக் கம்பீர் ஆதரவு

முற்றும் மோதல் 

சமீபத்தில் நிறைவு பெற்ற கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது.   இந்த போட்டி நிறைவடைந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,”கங்குலி கேப்டன் பதவியைத் தொடங்கிய காலத்திலிருந்து (2000-ஆம் ஆண்டு) தான் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிப் பாதையைத் துவங்கியது” என்றார்.  கோலியின் கருத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கவாஸ்கர்,”1970-1980 இடைப்பட்ட காலங்களில் விராட் கோலி  பிறந்திருக்க மாட்டார். அந்த கால கட்டத்தில் இந்திய அணி முதன் தலாக வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறத் தொடங்கியது. 1986-ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் தொடரைக் கைப்பற்றியது.மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு தொடர்களையும் டிரா செய்தது” என பதிலடி கொடுத்தார்.   

இந்தநிலையில் விராட் கோலியின் கருத்திற்கு முன்னாள் வீரரும், தில்லி பகுதி எம்.பி.யுமான கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறிய தாவது,”கோலியின் கருத்து அவரது தனிப்பட்டதாகும். கவாஸ்கர், கபில்தேவ் மற்ற கேப்டன்கள் காலத்தில் இந்திய அணி எப்போதுமே சொந்த மண் ணில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. கங்குலி தலைமையிலான இந்திய அணி  தான் வெளிநாடுகளில் அதிக வெற்றி களைக் குவிக்கத் தொடங்கியது என் பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கோலியின் கருத்தை ஏற்றுக் கொள்  கிறேன்” என ஆதரவு தெரிவித்துள்ளார்.   கம்பீரின் இந்த கருத்தால் கவாஸ்கர் பயங்கர கடுப்பில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.