1952-53 காலக் கட்டத்தில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மாதவ் ஆப்தே (86) காலமானார். இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் (1952-53) விளையாடி உள்ள மாதவ் ஆப்தே 542 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 67 முதல் தர ஆட்டங்களில் 3336 ரன்களும் (6 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள்) விளாசியுள் ளார். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து மும்பை கங்கா லீகில் ஜாலி கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக 1948 முதல் 2002 வரை விளையாடி 5,000 ரன்களை எடுத்தார். 70 வயது வரை இந்த தொடரில் விளையாடினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மாதவ் ஆப்தே மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டா லும் வயது மூப்பு காரணமாக மாதவ் ஆப்தேவின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் திங்களன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். மாதவ் ஆப்தேவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினுக்கு அங்கீகாரம்
சச்சின் டெண்டுல்கரை 15 வயதிலேயே சிசிஐ-க்கு ஆட வைத்தவர்தான் இந்த மாதவ் ஆப்தே. சச்சின் டெண்டுல்கரை மாதவ் ஆப்தே அன்று அங்கீகரித்திருக்காவிட்டால் இன்று கிரிக்கெட்டிற்கும் சச்சினுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்திருக்கும்.