tamilnadu

img

முதல் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் இலக்கு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 502 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் 71 ரன்கள் இந்திய அணியிடம் இருக்கும் பட்சத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்தார்.
 

;