tamilnadu

img

தினேஷ் கார்த்திக்கின் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து?

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் கரீபியன் பிரிமி யர் லீக் டி-20 தொடர் நடைபெற்று வரு கிறது.  இந்திய அணி நிர்வாகத்திடம் அனுமதி வாங்காமல் கரீபியன் தொடரைக் காண இந்திய அணி யின் விக்கெட் கீப்பரும், தமி ழக அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த் திக் கரீபியன் தொடர் நடக்  கும் மைதா னத்திற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்றதே மிகப்பெரிய தவறு. இதில் டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து அணி நிர்வாகத்துடன் ஆலோசனை செய்துள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் நேரலை ஒளிபரப்பில் வெளியாக பிசிசிஐ-க்கு புகார் கடிதம் பறந்தது. பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தங் களின் படி எந்த ஒரு வீரரும் முன் அனுமதி பெறாமல் வேறு எந்த விளையாட்டு நிகழ்வு களில் பங்கேற்றல் கூடாது என்பதால், பிசி சிஐ செயலர் ராகுல் ஜோஹ்ரி தினேஷ் கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.    தினேஷ் கார்த்திக் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.விளக்கம் ஏற்பு டையதாக இருந்தால் பிசிசிஐ பிரச்சனை யைக் கைவிடும். விளக்கம் ஏற்புடையதாக இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் நிய மித்த குழு விசாரணையில் குதிக்கும். இந்த குழு விசாரணை செய்தால் சட்டம் தொடர் பான நடவடிக்கைக்கு ஆளாகி தண்டனை உத்தரவு கண்டிப்பாகக் கிடைக்கும்.

பின்விளைவு எப்படி?

இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடர் பற்றி சர்வதேச கிரிக்கெட் தொடரில் பேசியதற்காக சுமார் ஓராண்டுக் காலம் தடை உத்தரவு பெற்றார். ஜடேஜா பேசியது சாதா ரண ஒப்பந்தம் தொடர்பான விசயம் தான் என்றாலும் பிசிசிஐ அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் செய்தது சாதாரண காரியம் இல்லை. அனுமதி வாங்காமல் கரிபியன் தொடர் சென்றது. அணி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தி யது. ஜெர்சி அணிந்தது. இது எல்லாம் மிகப்பெரிய ஜீரணிக்க முடியாத தவறாகக் கருதப்படும் என்பதால் தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தில் சேதாரம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் ஏன் சென்றார்?

டிரிபாங்கோ அணியின் உரிமையாளர், ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டன் என்பதால் அங்குச் சென்றுள்ளார் எனச் செய்திகள் கசிந்துள்ளன.