இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாக கமிட்டி தேர்தல் அக்டோபர் 22-ஆம் தேதி அன்றும், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்றும் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல்களும் இதே காலகட்டத்தில் நடைபெறுவதாக அறிவித் திருப்பதால் கிரிக்கெட் சங்க தேர்தல் தள்ளிப் போக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய், “ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்த லைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ தேர்தலை ஒரு நாள் தள்ளி வைத்து அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெறும்” என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது, “ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. அத னால் பிசிசிஐ தேர்தல்களுக்கு ஓட்டளிக்க வரும் உறுப்பினர்களுக்குச் சற்று சிரமம் ஏற் படும். இதனால் தேர்தலை ஒரு நாள் தள்ளி வைத்து அக்டோபர் 22-ஆம் தேதிக்கு பதி லாக அக்டோபர் 23-ஆம் தேதிக்கு பிசிசிஐ தேர்தல் நடைபெறும். தேர்தல் மாற்றம் தொடர்பாக வேறு ஏதேனும் செய்திகள் வெளியானால் அது தவறான செய்தியாகும்” என வினோத் ராய் கூறியுள்ளார். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.