tamilnadu

img

தோனியின் எதிர்காலம் குறித்து 24 ஆம் தேதி ஆலோசனை - பிசிசிஐ தலைவர்

தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24 ஆம் தேதி  ஆலோசிக்கப்படும் என்று பிசிசிஐ-யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளர்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது, கடந்த உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவாரா? தொடர்ந்து விளையாடுவாரா? என்ற கேள்வி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு நடந்த எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி கலந்து கொள்ளாமல் 2 மாதங்கள் ஓய்வு என கூறி சென்றார். இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்து வரும் 24 ஆம் தேதி தேர்வுக்குழுவிடம் ஆலோசிக்கப்படும் என கூறியுள்ளார். இது தொடர்பாக தோனியிடமும் பேசவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 24 ஆம் தேதி வங்கதேசத்து எதிராக நடைபெறும் 20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி தேர்வு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. 

;