இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு மனம் மாறி மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தார். சமீபத்தில் நிறைவு பெற்ற விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக அம்பதி ராயுடு விளையாடி வந்த நிலையில், பணம் மற்றும் ஊழல்வாதிகளால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் எப்படி முன்னேறும் என பவுன்சர் கருத்தை வீசி பல்வேறு புகார்களைத் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே முன்னாள் கேப்ட னும், ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான அசாருதீனுக்கும் ராயுடுவுக்கும் அவ்வப்போது வார் த்தைகளால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் விஜய் ஆனந்த் ஊழல் புகார் கூறிய அம்பதி ராயுடு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,” ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாகவும் விதிமுறைகளை மீறியும் அம்பதி ராயுடு பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். தலைமை செயல் அதிகாரி அவரிடம் விசாரணை நடத்த உள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில் அம்பதி ராயுடுவின் மீதான நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். ராயுடு தான் கூறிய கருத்திற்கு ஆதாரம் இல்லையென்றால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.