tamilnadu

img

உலகக்கோப்பை தகுதி சுற்று

அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக பிரச்சனைகளால் ஜிம்பாப்வே அணியைச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நீக்கியது. ஐசிசி-இன் இந்த அதிரடி முடிவால் வீரர்கள்,  கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் வேறு பிழை ப்பின்றி வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை டி-20 (8-வது சீசன்) தொடரின் தகுதி சுற்று ஆட்டத்தில் இடம்பெற்றிருந்த ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி-யின் தடை நிலுவையில் உள்ளதால், அந்த அணிக்குப் பதிலாக நைஜீரியாவைக் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.  தகுதி சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் (2019) தொடங்குகிறது. இதில் நைஜீரியா, யுஏஇ, ஹாங்காங், அயர்லாந்து, ஜெர்சி (பிரான்ஸ் அருகே உள்ள தீவு நாடு), கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியு கினியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். தகுதிச் சுற்றில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 உலகக்கோப்பை போட்டித் தொடரின் லீக் சுற்றில் களமிறங்கும்.  2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் மகளிர் உலக டி-20 உலகக் கோப்பை (ஆஸ்திரேலியா) தொடருக்கான தகுதி சுற்றுகளில் ஜிம்பாப்வே-விற்கு பதிலாக நமீபியா அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.